நிலைமாறாத் தண்ணீர்!

0

-துஷ்யந்தி, இலங்கை

இரு மூலக்கூறுகள் ஐதரசனும்
ஒரு மூலக்கூறு ஒட்சிசனும்
இணைந்த ஒரு திரவமாய்
உலகைக் குளிர்மையாக்கும்
திரவ ஊடகமே தண்ணீர்…!

உயிர்களின் தோற்றத்தில்                     water
முக்கியப் பங்கெடுத்து
உடலிலே ஓடும் குருதியாகிக்
கருவைச் சூழ்ந்த பன்னீர்க் குடமாகிக்
கடலிலே உடல் சாம்பல்
கரையும் வரைத் தொடர்ந்திடும்
வாழ்வில் தண்ணீர்.!

கற்பாறைகளுக்கிடையே
தோற்றமாகி மலையன்னையின்
மடியிலே தவழ்ந்து கடலன்னையின்
பாதங்களை அடையும்வரை
பல்வேறு பெயர்களுடன்
உலகை வலம் வரும் தண்ணீர்!

அன்றாடம் மனிதனின்
அத்தியாவசியத் தேவையாகி
காலநிலைக் கோலங்களின்
முக்கியப் பங்காளியாகி
மழைத்தாயின் தாய்ப்பாலாகி
மண்ணில் விழும் தண்ணீர்!

நீ வற்றிப் போனால்
எத்தியோப்பியா…
நீ வளமானதால்
செழிப்பான மண்ணீர்…
நீ இன்றி இறப்பு
உன்னாலே பிறப்பு…
அளவாய்ப் பாவித்தால் சிறப்பு…
அதனால் இன்னொருவருக்குத்
தண்ணீர் கிடைப்பு…!!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *