IMG-20250201-WA0032

 

மரத்தில் பூத்த கதிர் மலர்
காமபாணம் கொண்டது
நிலத்தில் பூத்த கவி மலர்
காதல்நாணம் கொண்டது
குளத்தில் பூத்த பதுமமோ
இதழ்விரியச் சிரித்தது மின்
தளத்தில் பூத்த பதிவிலோ
தமிழும் பொழியச் சிவந்தது

இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
விழித்ததும் மறைந்து போகும்
உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
முதிர்வினில் மறந்து போகும்
பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
பிணியினில் மறத்து போகும்
பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
இறப்பில் எரிந்து போகும்

பயணம் முடிந்த தருண மெல்லாம்
சீட்டை கிழித்திடும் நாளும்
அயனம் மாறிடும் உதய மெல்லாம்
ஏட்டைப் புரட்டிடும் மேலும்
சயனம் நிரந்தர மாகிடுமேனி
சடலம் என்றவர் காணும்
நயனம் பெருகிடும் நீராற்றில்
நினைவுகள் கரைந்திடும் மாயம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.