வள்ளுவ மாலை
-சுரேஜமீ
எதுசேர்க்கும் போம்வழி இன்பம் நிலத்தார்க்கு
ஏற்றதொரு வாழ்வில் புலன்வழிச் செல்லா-
வினையறிந்து வீழான் துணையொடு – வள்ளுவன்
வாக்கின் வழிசெல் நன்கு!
மொழிமுன் னேகிதனைப் போக்கிநற் பண்பே
வழியாக்கி மானுடம் உய்யவோர் – வேதமும்
செய்திட்ட மாமுனியாம் வள்ளுவன் – நூல்தினம்
செப்பிட வாழ்வே அறம்!
உயிரும் மெய்யும் தனைவாட்ட – தன்னுதிரம்
கூட்டிட நாளும் தவமிருப்பாள் தாயவள்
வேண்டுவோர்க் கில்லையொரு துன்பம் – தினமோதும்
வள்ளுவம் நெறியுடை யோர்!
நீடுவாழ்தல் ஏதுபயன் மண்ணில் நெறியிலார்
ஏடுசொல் ஏகிலர் என்றும் – இருள்சூழ்
சேர்செல்வம் யாவும் துணைவரா – நெஞ்சில்
செலுத்திடும் வள்ளுவம் வரும்!
சாதிமதம் சந்ததி யறுக்கும் – தீவினைகொள்
சாத்திரம் பேசுமொரு கூட்டம் – வழிநில்லா
நீதிதரும் பொய்யில் மறைநூல் – வள்ளுவம்
சொல்நெறி வாழும் உயிர்க்கு!