தமிழை வளர்த்திடுவோம்!
-விஜயகுமார் வேல்முருகன்
தமிழகத்தில் தமிழில் பேசத் தயக்கம் ஏனடா?
தாய்மொழி உனக்குத் தமிழே தானடா
தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா?
தமிழைத் தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா?
தமிழகத்திலேயே தமிழில்லையென்றால்
தமிழ் வளர்வது ஏதடா?
தமிழ்ச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊரடா
தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா
தமிழகப் பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா
தமிழ்ப்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா?
தமிழைப்படி என்றநிலை போனதடா
தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
தற்கால நிலையது மாறவேண்டுமடா
தன்னிகரில்லாத் தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா!
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்