-பா.ராஜசேகர்

ஒருவரியில்
எப்படிச் சொல்ல…?
நீயே உலகமம்மா!

என்மேல
மனசு வைத்தாய்
இதயம் உண்டாச்சு !

வேதனையில்
கண்விழித்தாய் உயிரே
உண்டாச்சு !

சோதனைகள்
நீ கடந்தாய் உன்உதிரம்
என்னுயிர் மூச்சாச்சு !

சுமைகள் நீசுமந்து
தொப்புள் கொடி
இரண்டாச்சு!

தூங்காம
தாலாட்டி
நீ தூங்க நாளாச்சு !

பசிக்குப் பாலூட்ட
உன் ரத்தம்
சோறாச்சு !

நான்தவழ நடைபழக
உன்கண்ணீரே
கவிதையாச்சு!

நீயே உலகமம்மா
ஒருவரியில்
எப்படிச் சொல்வேன் ’அம்மா’?!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *