சுரேஜமீ

குறளென்ப சான்றோரே நீதிவழி நிற்றற்கு
வேறொத்த நூலில்லை வாழ்வின் வகையறிய
தேடிப்படி ஏட்டினிலே பேர்சொல்ல – ஊர்சொல்ல  valluvar
வேண்டுமெனில் ஓதுகுறள் நன்று!

நன்றுணர் ஏகும்செயல் யாவும் துணைநிற்க
நானிலம் கண்டதோர் நூலாம் – திருக்குறள்
நாடிடத் தீதறுகுணம் பெற்றுக் கலைமகள்
நாளும் இருப்பாள் நின்று!

யுகம்பல காணும் மொழிதாங்கி வந்ததோர்
மூலிகையாம் வாழும்கலை சொல்லும் – திருக்குறள்
சாதிக்கும் வாழ்க்கைக்குப் போதித்து வாய்ப்பளிக்கும்
சோதித்துப் பார்க்கத் தெளிந்து!

நில்லாத நீரோடைத் தாண்டும் தடைபோலச்
சொல்லாடும் வேதம் திருக்குறளே மாந்தர்க்கு
வேண்டுவர் வென்றிட உலகத்தில் யாவையும்
தோண்டிட ஊறும் அறிவு!

இச்சையால் பெற்றிடும் இன்பம் சிலநாளே
பிச்சையோ வாழ்வில் கொடிது – செவ்வனே
ஊனைத் திருத்தி உள்ளம் வழியேகத்
தூணாம் திருக்குறள் கேள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *