இரும்பு இயக்குநர்!
-இரா.சந்தோஷ்குமார், திருப்பூர்
வளைந்தும் நெளிந்தும்
நீளும் காட்சியாவும்
தொடர் கவிதையாய்…
தாளம் தப்பாத
தட தடவொலியும்
இன்னிசைத்தேவனின்
இனிய மெட்டில் பூத்த
அபூர்வ ராகமாய்..!
கதை
திரைக்கதை
இசை
என
எதை எதையோ
என் சிந்தனையரங்கில்
வேகமாய்த் திரையிடுகிறது
ஜன்னலோரத்தில் நான்
மெளனமாய்ப் பயணிக்கும்
இந்தக் கோவை எக்ஸ்பிரஸ்!