-பா. ராஜசேகர்

தந்தையால்
இவ்வுலகில்
கால் பதித்தேன்!

சிந்தையில்
இரவு பகல்
முகம் பதித்தேன் !

பந்தியில்
அமர்ந்துண்டேன்
அவன் உழைப்பில்!

அஞ்சினேன்
தவறிழைக்க
முகம் கண்டு !

துஞ்சினேன்
அரவணைப்பில்
தினம் உண்டு !

மிஞ்சினேன்
கல்வியிலே
அவன் பங்குண்டு !

வீதியில்
நடக்கையிலே
அவன் மகனாய் !

வெற்றிகள்
குவிக்கையிலே
தினம் பெருமிதமே !

சுதந்திரம்
தினம் உணர்ந்தேன்
அவன் தந்திரத்தில் !

சாத்திரங்கள்
எடுத்து வைப்பான்
என் நன்மைக்காக !

மந்திரம்
தந்தை சொல்லே
உண்மையாக !

பொத்திப் பொத்தி
வளர்த்தானே
நான் பூமிவாழ !

பொக்கிசமே
தந்தை என்பேன்
உலகம் வாழ !

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "தந்தை ஒரு பொக்கிசமே !"

  1. தந்தை பற்றி தனயன் கவியெழுதி தந்தமைக்கு முதல் நன்றி… நாம் ஆண்டாண்டு காலமாய் ஆயிரம்கவிகள் எழுதியிருக்கிறோம் ..அனைத்தும் தாய்க்கு மட்டுமே!  தாய்க்கு நிகரான தந்தை பற்றி வாய்திறக்க மறந்த சமுதாயம்!  சரி.. நாம்தான் அதனைச் செய்யவில்லையென்றால் மகளாய் பிறந்தவர்கள் செய்திருக்கலாமே!  என்னமோ போங்கள்!  அன்னையர்க்கு நாம்தரும் இடத்தை தந்தையர்க்கு மகள்கள் தர மறந்துவிடுகிறார்கள்!  உண்மையைச் சொன்னேன்.. மகளிரணி பாய்ந்துவந்துவிடப்போகிறது!!

  2. நன்றி
    சகோதரா ….

    மறுமொழியிட
    மரணித்துவிட்டேன்
    மன்னித்தருள்வாயாக ….

    நீண்ட
    இடைவெளி
    சிறிது பணிச்சுமை
    மன்னித்து வாழ்த்தியருள்வீர்
    வாழ்த்துக்களுக்கு நன்றி

  3. பூவை செங்குட்டுவன் 1972 ஆம் வருடம் அகத்தியர் திரைப்படத்திற்காக தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பாடல் எழுதியிருந்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைப்பு. டி.கே. கலா அவர்கள் பாடியுள்ளார்.
    இதா அந்த பாடல் வரிகள்.
    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

    தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
    தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
    தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
    தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்

    மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
    மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

    பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
    பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

    பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
    பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

    கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
    கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
    கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
    . தந்தை ஒரு பொக்கிசமே என்று எழுதிய திருபா. ராஜசேகருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.