-பா.ராஜசேகர்
அன்பும்
பண்பும்
பாசம் தரும் !
உண்மையும்
உழைப்பும்
ஊக்கம் தரும் !
கல்விச்
செல்வமே
புகழைத்தரும் !
கருமை
மேகமே
மழையைத் தரும்!
காதலில்
தூய்மை
மேன்மை பெறும் !
மழலைச்
செல்வமே
மகிழ்வைத் தரும்!
ஒவ்வொரு
இரவும்
பகலைத் தரும் !
ஒளிகண்ட
நிலவே
வெளிச்சம் தரும் !
நல்நிலம் கண்ட
முளையே
விளைச்சல் தரும் !
தொய்வில்லா
முயற்சியே
வெற்றியைத் தரும்!
மாற்றத்தில்
நன்றே
சிறப்பைப் பெறும்!
துன்பத்தின்
பின் இன்பமே
இனிமை தரும் !
கருணை
மனமே
இறையருள் பெறும்!

Leave a Reply