“ஜெனி…நீ வருவாயா?”
— கனவு திறவோன்.
டூ வீலரை பார்க் செய்துவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து முதல் பார்வையில் ஜெனிஃபரைத் தேடினேன்.
அவள் இடம் வெறுமையாக இருந்தது. இன்னும் அவள் வரவில்லை.
‘ப்ச்’ எத்தனை நாள் தான் இப்படி டபாய்ப்பாள்?
ரஜினியின் அடுத்தப் பட அறிவிப்பு போல சஸ்பென்ஸ் எகிறுகிறதே? இன்றாவது வருவாளா வரமாட்டாளா?
எங்காவது களவு, கொலை நடந்தால் எனக்கும் ஜெனிபருக்கும் தான் முதல் சம்மன் அனுப்புவார் இன்ஸ்பெக்டர். நான்கு நாட்களாய் ஜெனிஃபர் டூட்டிக்கு வரவில்லை. அதனால் வேலையில்லாமல் ஸ்டேசனில் முடங்கிக் கிடந்தால் வெறும் டீ பாய் வேலைதான் மிஞ்சுகிறது.
இந்த மகளிர் போலீஸ் ஸ்டேசன் வந்த பிறகு எங்கள் ஸ்டேசனில் வேலை பார்த்த அழகிகளை அங்கே மாற்றி விட்டார்கள். கண்ணுக்கு அளர்ச்சியாக இருக்கிறது.
என்ன செய்யலாம்? எதற்கும் மணியிடம் கேட்டுவிடலாம்…
ஆண்ட்ராய்ட் போனில் மணியைக் கூப்பிட்டேன்… மணியிடம் நிச்சயம் காரணம் இருக்கும். ஆஃபிசுக்கு வராமல் மட்டம் போடும் அத்தனை பேரின் உண்மை முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவான்.
“என்ன மணி? இன்னைக்கும் ஜெனிஃபர் வரல…”
“திருமல…, ஜெனிக்கு பேதி சரியாகல… அதனால மூடும் சரியில்ல… இன்னிக்கு வர்றது டவுட்டு தான்…” என்று ஸ்னிஃபர் டாக் ஜெனிஃபர் வர இயலாத காரணத்தை விளக்கினார் அதன் டிரைனர் மணி.
சிம்ளி சூப்பர் தோழர். வாழ்த்துக்கள்
நன்றி மாதவன் ஸ்ரீரங்கம்.