வைகாசி விசாகத் திருநாளாம்!

0

-சரஸ்வதி ராசேந்திரன்

தேடி   உன்னைச் சரண் அடைந்தேன்
திருத்தணிகை   முருகா!
தீமைகளைத்    தகர்த் தெறிவாய்
திருச்செந்தூர்    ஷண்முகனே!                   lord muruga

பாடி உன்னைச்   சரணடைந்தேன்
பழனிமலை  முருகா!
கோடி நலம்    செய்திடுவாய்!
குறைகள்     எல்லாம் தீர்ப்பாய்!

பாவங்களைப்    போக்கிடப்பா
பச்சை மலை   முருகா!
வல்வினைகள்  போக்கிடுவாய்
வைகாசி    விசாகனே!

அமைதியைத்   தந்திடுவாய்
அழகர்   மலைக் குமரா!
சிரத்தையுடன்    வேண்டுகிறோம்
சிக்கல்   சிங்கார வேலா!

விரைந்து நீ  வந்திடு
விராலிமலை   வேலவா!
பக்தர்களின்   குறை தீர்த்திடு
பவழமலைஆண்டவனே! 

பால் காவடி,  பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
பக்தர்கள் வந்து நின்றோம் உன் காலடிக்கு!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *