-துஷ்யந்தி, இலங்கை

வாழ்க்கையை ரசிக்க
வைகறையைத் தேடிவந்தேன்
வருடிச்சென்றது என் மேனியில்
சில்லென்ற காற்று…!                                        nature

சிலிர்ந்தது என் மேனி
குளிர்ந்தது உள்ளம்
தெளிந்த நதியின் நடையில்
தொலைகின்றது என் மனம்!

பஞ்சணைப் படுக்கையாய்
புல்லினங்கள் மேனி தடவ
ஏதேதோ எண்ணங்கள்
அரவணைக்கக் கண்டேன்…!

பாடித்திரியும் பறவைகள்
காதிலே காதல் கானம் சொல்ல
வண்டினங்கள் பூவை வட்டமிட்டு
ரீங்காரமிட…
காதலின் கோலத்தைக்
கணப்பொழுதில் கண்டேன்…!

நதி நீரில் மீனினங்கள்
மேலேழுந்து பாய்கையில்
நானும் கூட மீனினமாக
பிறக்கவில்லையே…என்று
கற்பனையில் ஓர் ஆதங்கம்!

அந்திவானம் ஒளியிரங்க
நதிநீரில் கதிரவனின் மேனிபடப்
பறவைகள் வானத்தில் வட்டமிடக்
கங்கையின் கோலத்தை
என்னவென்று சொல்ல…!

பட்டாம்பூச்சியாய் நானும் மாறி
நதிநீரை முகத்தில் தெளிக்க
நினைவுகளும் மறந்துபோக
மயங்கிவிட்டேன் இயற்கையில்!!


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.