-கவிஜி

பித்த நிலைக்குள்
போகும் உன்னதத் தருணம்
மொத்தக்
கொடியில் ஒத்த ஆடை…

தாவரங்கள் துருவங்கள்
இலைமறையாய்
உள்ளங்கை
மறைக்கும் உயிரோசைக்குள்
காடு கொண்ட ஒற்றையடி…

மதி கொண்ட நிறத்தின்
மௌன மொழி மண்டிய
பயத்தில் முயங்கித்
திரிவது பூனை
மறந்த மதில்…

சொல்லுதல் செய்தல்
இடைவெளி இல்லாத
நூலகத்தில் பாசி படர்ந்து
தூசுகளூடே சிறு கீற்று
வெளிச்சம்…

தத்தம் கண்களின் கவிதை
கொன்று குவிக்கும்
குருட்டுச் சிந்தனைக்குள்
மயிரடர்ந்த
மயக்கத் தாழ்…

இரு கைகள் ஆணி
இறங்க
இன்னும் இரு கைகள்
நீட்டியவனே
சம்பளம்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *