வள்ளுவ மாலை
– சுரேஜமீ
மிகைச்சூடும் சூழ்வறட்டும் தாங்கா முடிவினிலே
மாண்டிடும் வாழ்விந்த மண்ணில் – நிலத்தை
மீட்டெடுக்க வள்ளுவம் போற்றிடு நாளும்
மனிதம் சேர்க்கும் மாண்பு!
எண்ணிக்கை கூட்டிடுதல் என்றும் உறவாகா
எண்ணங்கள் சேர்த்து இதயங்கள் கோத்து
உதவுங்கள் யார்க்கும் திருக்குறள் சொல்லும்
உயர்நெறி பற்றிச் சிறந்து!
நேர்பட வாழ்தல் சுகமென்றும் கொள்கை
நேர்கெடு அந்நாள் பழிவரும் பின்னர்
நேரும் கொடுமை கோள்கெடும் – உண்மைத்
திருக்குறள் மாண்பு தரும்!
மாறிடும் பண்பு நெறிசார் மண்ணேகி
மானுடம் காக்கத் தவறின் – கெட்டிடும்
முன்னோர் கொடுமரபும் பட்டிடத் தேறும்
மனமேசெல் வள்ளுவம் முன்!
கறையிலா நெஞ்சம் தினமும் கெஞ்சும்
இறையிடம் தஞ்சம் நிறைபட வேண்டி
உறைபவன் நிற்பான் துணையென – வள்ளுவம்
ஏகித்தொழச் சேரும் கருணை!