-ஷகி, இலங்கை

ஏனோ மனசு
அழுகிறது
எதையும் சொல்ல
மறுக்கிறது!

தேற்றித் தேற்றிப்
பார்த்து விட்டேன்
அழுது
தீர்க்கட்டும் என்றே
விட்டு விட்டேன்!

நானாய் எதையும்
நாடவில்லை
தானாய் அதுவே
நடக்கிறது!

வீணாய் எதையோ
நினைக்கிறது
தரையில்
மீனாய்க் கிடந்து
துடிக்கிறது!

வலிகள் அதற்குப்
புதிதுமில்லை
வஞ்சிக்கப் பட்டதும்
புதிதுமில்லை!

ஏக்கங்கள்  அதற்குப்
புதிதுமில்லை
தாக்கங்கள் அதற்குப்
புதிதுமில்லை!

இழப்புக்கள் அதற்குப்
புதிதுமில்லை
ஏமாற்றங்கள் ஒன்றும்
புதிதுமில்லை!

புறக்கணிப்புக்கள்
புதிதுமில்லை
அவமதிப்புக்கள் அதற்குப்
புதிதுமில்லை!

தோல்வியலே
வாழ்வியலாய்க் கண்ட
உள்ளம்தான்

ஏனோ இன்று
அழுகிறது
எதையோ புதிதாய்
நினைக்கிறது
மொழிகள் இன்றித்
தவிக்கிறது
வழிகள் இன்றி
வலிக்கிறது!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.