-மீ.விசுவநாதன்

ஒருசொல்லில் எழவைப்பான்
ஒருசொல்லில் அழவைப்பான் – அவன்   subramanya_bharathi
ஒருகவி ராஜ சிங்கம்!            

தமிழ்நாட்டில் பிறந்தோர்கள்
தமிழ்ப்பேச்சில் சிறந்தோர்கள் – எனும்
தரம்வர வேண்டு மென்பான்!    

தன்நாட்டு மக்களுக்காய்த்
தன்மான வாழ்வினுக்காய் – வரும்
தவகவி வாக்குச் சொன்னான்!

ஆவேசம் வந்தாலும்
ஆனந்தம் என்றாலும் – நல்
அழகிய கவிதை தந்தான்!

உண்மைக்கே உடன்நின்றான்
பெண்மைக்கோ உயிரானான் – ஒரு
பெரும்பழ மைக்கவன் பாலம்!    

நியாயத்தின் தராசினிலே
நிமிர்த்தேதன் கருத்ததனை – சுய
நினைவுடன் நிறுத்த மனிதன்!    

பாரதத்தாய்த் திருமகளின்
பரம்பரையை உருவாக்க – ஒளி
பாரதி என்று மிருப்பான்!        

(11.09.2015 மகாகவி பாரதியார் நினைவுதினம்)

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதி என்று மிருப்பான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *