-ஆர். எஸ். கலா

ஏழை என்பதைக் கைவிடு
ஏழ்மையைக் குறித்து
அடிமையாவதைத் தவிர்த்திடு
உழைப்புக்குத்  தகுந்த ஊதியம்
கொடுப்போருக்குக் கைநாட்டு வைத்திடு

உறவானாலும் உரிய சம்பளம் பெற்றிடு
அன்றாடம் வாழ்கையிலே விஷநாகம்
வந்து முட்டும் தட்டிவிடு
உன்னைக் கொத்தாமல் தவிர்த்துவிடு

அதிகாரத்தோரணையில்
பேசுவதை மறந்துவிடு
அன்றாட வாழ்வை
அன்பாகக் கழித்துவிடு

உள்ளம் குமுறவைக்கும்
கள்ளச் செயல்களை விட்டுவிடு
உயர்தர மனிதனாக
வரம் பெற்றுவிடு

பரிதாப நிலைகண்டு பதறிவிடு
பாராமுகமாக இருப்போரை விரட்டிவிடு
அச்சு வெல்லமானாலும்
நஞ்சு உண்டு என்று கற்றுவிடு
அஞ்சா நெஞ்சம் கொண்டவன் என்று
பெயர் பெற்றுவிடு

உழைக்கும் கரங்கள் வல்லமை பெற்றவை
நீயும் உன் கரங்களால் உழைத்துவிடு
உப்புநீர்க் கண் சிந்துவதை நிறுத்திவிடு
உப்புநீர் உடலில் சுரக்கும்வரை
உழைத்துவிடு

மண்ணுலகில் சிறக்க…பறக்க…இனிக்க
இன்ப வாழ்வோடு நடைபோடு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *