நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.
பவள சங்கரி
இன்றைய நவீன உலகில் பெண்களுக்கானச் சட்டத்தின் நிலை, குறிப்பாக அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்துப் பார்ப்போமானால், ஒரு பெண் திருமணம் என்ற பந்தத்தில் நுழைவதற்குக் காரணமே அவளுடைய எதிர்கால பாதுகாப்பு என்ற ஒன்றைக் கருதியே. ஆனால் கணவன் ஏதேனும் ஒரு காரணத்திற்காக இரண்டாவது மணம் புரிய விரும்பினால், அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதைவிட கணவனிடமிருந்து ஜீவனாம்சம் மட்டுமே அவள் பெற முடியும். அவளுடைய சீதனமான நகை, சொத்து, பணம் என அனைத்து தனிப்பட்ட உடமைகளைத் தவிர்த்து குழந்தைகள் முதல் மற்ற அசையா சொத்துகள், அசையும் சொத்துகள் என அனைத்தும் கணவனுக்கே உடமையுள்ளது. ஒரு மனைவி, ஒரு குடும்பத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் இக்காலகட்டத்தில் பலதாரமணம் என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது. பொதுவாக சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே.
மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.
நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.
அன்புள்ள பவளசங்கரி எழுதியிருப்பது என்னைப்பொருத்த அளவில் உண்மை. மணமுறிவுக்கு முன்பே பிள்ளையைப் பாதுகாக்கும் உரிமை (child custody) தகப்பனுக்கே என்று தெரிவிக்கப்பட்டது. Something like … the father gets the custody especially if the child is a male! என் மாமனாரே ஓர் அரசுசார் வழக்கறிஞர் (public prosecutor). போராடுவதுக்குத் தேவையான வசதிகள் எனக்கில்லாமல் விட்டுக்கொடுக்கவேண்டிவந்தது.
பவளசங்கரி, நேரம் கிடைத்தால் தருமசாத்திரநூல்களில் கூறப்பட்டிருக்கும் எட்டுவகை விவாகங்களைப் பற்றிப்படிக்கவும்: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசுரம், இராக்கதம், பைசாசம். இந்த எட்டுவகைத் திருமணமுறைகளில் முதல் நான்கும் பெண்ணைக் கொடுப்பதைக் குறிக்கும். [உரையாசிரியர்களே இங்கே ஒருதலைக்காதல் என்பதைச் சுட்டியிருக்கிறார்கள்.] இங்கே பெண் என்பவள் ஒரு ‘தானப்பொருள்’தான். ஆணின் சுகத்துக்காக என்று தானமாகக் கொடுக்கப்படும் அவளுக்குத் தனியுரிமையில்லை. இதைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் படிக்கும்போதெல்லாம் என் இரத்தம் கொதிக்கும். இந்தத் தருமசாத்திரத்தை ஒட்டியே இந்துச்சட்டம் உருவாகியிருக்கிறது. அந்தத் தருமசாத்திரத்தைக் குறைசொல்லவா, இல்லை அதைத் தம் வசதிக்காகப் பின்னாளிலும் பின்பற்றும் சமூகத்தைக் குறைசொல்லவா?
நன்றி அம்மா. என்னுடைய ‘நயமிகு நங்கையர்’ என்ற நூலில் இக்குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். தங்கள் மடல் கண்ட பின்பு அதை எடுத்து இதோ இங்கு https://www.vallamai.com/?p=67011 இட்டிருக்கிறேன். தங்களைப்போன்ற சமூக ஆர்வலர் அறிஞர்களின் வாதங்கள் ஏற்கப்பட்டால்தானே நாடும், நம் நாட்டுப் பெண்களும் முன்னேற முடியும். இன்னும் பழைய மாவையே கடனுக்காக அரைத்துக்கொண்டிருக்கும் நீர்த்துப்போன நம் சட்டங்களை என்று புதுப்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இதற்கும் ஒரு போராட்டம் வெடிக்க வேண்டுமோ?
காலக்கட்டங்கள் மாறும்பொழுது நமது சிந்தனையிலும் வாழ்க்கைமுறைகளிலும் சட்டங்களிலும் சமுதாய நோக்குகளிலும் மாற்றங்கள் தேவை .கட்டுரை சிந்தனைக்கு விருந்து. பாராட்டுக்கள்.