இன்னம்பூரான் பக்கம் 5: கனம் கோர்ட்டார் அவர்களே! 27

0

பெண்ணே! சகல சம்பத்துக்களுடன் வாழ்க.

இன்னம்பூரான்
10 03 2016

innam

‘இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே’ என்ற தலைப்பில் வல்லமை ஆசிரியர் எழுதிய

‘… சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே. ‘

என்ற குறிப்பின் மீது,  நான் எழுதிய

‘நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.’

என்ற பின்னூட்டம், உணர்ச்சிவசமாக அவர் தொடங்கிய ‘மின் தமிழ், வல்லமை, தமிழ் வாசல்’ பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. 1960 களில் நானும் வஸந்தாவும் மிகுந்த பொறுப்புடன் பங்கு கொண்ட ஒரு விவாகரத்து வழக்கில் பிறந்த பெண் குழந்தை தாயின் பராமரிப்பில் தான் வளரவேண்டும்; தகப்பனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விசிட்டிங் உரிமையும் மறுக்கப்பட்டது என்று தீர்வு வழங்கப்பட்டது. மெரிட் என்று ஒன்றை பார்க்கிறார்கள் அல்லவா.

திருமதி. ரேவதி நரசிம்மன் கொடுத்த அடி பலமானது.

‘மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.‘

என்று அவர் சொல்வது தான் அந்த பலமான அடி. ஏனென்றால், அதில் உண்மை புதைந்து இருக்கிறது. ஆனாலும், சுட்டெரிக்கும் அந்த உண்மைக்கு இந்து திருமண சட்டமோ, நீதிமன்றத்துத் தீர்ப்புகளோ காரணம் அல்ல.

பவளசங்கரி கொடுத்த இணைப்பையும் அந்த தளத்தையும் முழுதும் படித்தேன். தகவல்கள் இருந்தாலும், பவளசங்கரியின் தொடருக்கு அது அணி சேர்க்கவில்லை. தற்பொழுது நடக்கும் உரையாடலை முழுதும் படிக்க வில்லை. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்ற இன்னல் சட்டத்தின் ஓட்டைகளால் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.

நீதிபதி கஜேந்திரகட்கர் அவர்கள் மிகவும் போற்றப்பட்ட நீதிபதி. அவருடைய தீர்வுகளும், கருத்துக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. சட்டக்கமிஷனின் தலைவராக இருந்த அவர் மார்ச் 1974ல் Hindu Marriage Act,1955 And Special Marriage Act, 1954 பற்றி அளித்த 59 வது ரிப்போர்ட்டை கவனித்தால் நல்லது பயக்கும். எனினும், அவரவர் உரிமைக்கேற்ப பெரும்பாலோர் என்னுடைய இத்தகைய கட்டுரைகளை படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால், தெரிந்த நிதர்சனத்தை எடுத்துரைக்காமல் இருப்பதும் தவறு. எனவே, ஒரு அறிமுகத்துடன், இதை நிறுத்தி விடுகிறேன். தேவைக்கிணங்க, பிறகு பார்க்கலாம்.

அக்காலத்து அரசும் அந்த கமிஷனும் விவாகரத்து செய்வதை எளிதாக்கவேண்டும், இல்லறத்தில் முழுமை, மறுமணம் செய்து கொள்வதற்கு துணை போகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயங்கினார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. கிரிமினல் கோட் ஷரத்து 488 படி ஜீவானம்சத்துக்கும் விவாகரத்து உரிமைக்கும், பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்தது. அதில் என்ன தவறு? அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா? என்று அரசு வினா எழுப்பியது. அதில் என்ன தவறு?

The Hindu Marriage Act 1955ல் அமலுக்கு வந்தது. Hindu Succession Act, 1956, Guardianship Act, 1956 and the Hindu Adoptions and Maintenance Act, 1956 அடுத்து வந்தன. இவற்றின் பின்னணி:

“ …நமது சிந்தனைகளிலும் , அணுகுமுறையிலும் ஒரு புரட்சி வரவேண்டும். நமது தொன்மையிலிருந்து நாம் அணைந்த சாம்பலை உதறிவிட்டு, தீச்சுடர்களை எடுத்துக்கொள்ளவேண்டும். …

[தரும சாஸ்திரம் சொல்லும், தமிழ் இலக்கியம் கூறும் எட்டு வகை விவாகங்களையும், சங்க நூல்கள் பாராட்டிய தலைவன் – தலைவி கூடல்-ஊடல், பகற்குறி, இரவுக்குறி, அலர், உடன்போக்கு ஆகியவற்றில் எது தீச்சுடர்? எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது!] … கடந்த காலத்தை நினைவில் வைப்போம்; நிகழ்காலத்தில் கவனம் வைப்போம்; மனதில் துணிவுடன், சுய நம்ப்பிக்கையுடன் வருங்காலத்தை படைப்போம்…” .
– ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்

மேற்படி சான்றுகளில் தவறு, பெண்ணுக்கு அநீதி இருந்தால், சொல்லுங்கள். இதை எதிர்த்தது பழமை, தர்ம சாத்திரங்கள், சாதீய பார்ப்பனர் போக்கு ஆகியவை. நாம் அவர்களுடன் கூட்டு சேரவேண்டுமா? சொத்து பெண்களுக்கு 1882 வரை இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. இந்திய சனாதன சாத்திரப்படி 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில், ஸ்த்ரீதனம் என்பதற்கு விக்னேஸ்வரர் என்ற வல்லுனர் இட்ட பட்டியல் கீழே:

தந்தை தந்தது;
தாய் தந்தது [மஞ்சக்காணி];
கணவன் கொடுத்தது;
உடன் பிறப்பு கொடுத்தது;
மாமன்மார் கொடுத்தது;
திருமணப்பரிசுகள்.;
வாரிசு சொத்து;
வாங்கிக்கொண்டது;
சொத்துப்பிரிவினை;
பிடுங்கிக்கொடுக்கப்படது.

[இவை எல்லாம் மனுவும், யாஞ்யவல்கரும் மற்றோரும் கூறியபடி பெண்ணை சார்ந்தது].

உண்மை சுடும் என்பதை சுட்டிக்காட்ட நீதிபதி கஜேந்திரகட்கர் சொன்னதை கேட்கவும்:

“ இந்துமதம் சார்ந்த இந்த நான்கு சட்டங்களும் புரட்சிகரமானவை. தனிப்பட்டவர்களை கண்காணிக்கும் சட்டம் சமுதாயத்தை காக்கவேண்டும், மதரீதியை கழிக்க வேண்டும் (மற்ற மதங்களை பேசலாகாது; மட்டுறுத்துவார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அவனொரு இந்து) என்ற முற்போக்குக் கருத்தை பார்லிமெண்ட் அமல் படுத்துவது, நமது அரசியல் சாஸனத்தின் 14வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது.’

இது தவறா?

இத்தனை சொன்னபின்னும் என்னுடைய எதிர்ப்பை சொல்லவில்லை.

‘தனிப்பட்ட ஒவ்வோருவரின் குணாதிசயமும் ஏற்படுத்தும் இழப்புக்கு மதங்கள் ,பழைய முறைகள் என்ன செய்யும் என்று தமிழ்த்தேனீ வினவியுள்ளார். ரேவதியின் கவலையை முன்பே எடுத்துரைத்தேன். ஆம். பெண்கள் எதிர் நீச்சல் அடிக்கவேண்டிருக்கிறது என்ற பொத்தாம்பொதுவான கருத்தை மூடி மறைக்க முடியாது. அது நிஜம் தான். காரணத்தைச் சொன்னால் அடிப்பார்கள். சொல்லி விட்டு விடை பெறுகிறேன். சட்டம் அளித்ததை அவரவர் சமூகங்கள் தட்டிப்பறிக்கின்றன. அது தான் உண்மை. அதனால் தான் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. 1974க்கு பிறகு பல முன்னேற்றங்கள், பின்னடைவுகள், பொய்யும் புளுகுகளும்.

நான் ஆக்கப்பூர்வமாக யாராவது கேட்டால் பதில் சொல்கிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/75/MarriageAndMorals.jpg/220px-MarriageAndMorals.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *