பாண்டியர் காலத்தில் சமசுகிருத மொழிப் புலமை

0

பவள சங்கரி

தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்கள் சமசுகிருதத்தையும் சமமாகப் போற்றி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டு மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது சமசுகிருத மொழியையும் பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தின் சமசுகிருத கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களில் காணப்படும் அரசாணைகள், குறிப்புகள் ஆகியவற்றில் சமசுகிருத மொழி பயன்படுத்தப் பட்டிருப்பதிலிருந்து இதனை அறிய முடிகிறது. பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், கவிஞர்களைப் போற்றியவர்களாகவும் இருந்துள்ளனர். தமிழ் சமசுகிருதம் என்ற பேதமற்று கவிஞர்களைப் போற்றியிருந்தனர்! முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் பாண்டிய மன்னன், ‘வித்யாசார விபூஷணன்’ அதாவது கல்விக்கு அணிசேர்ப்பவன் என்ற பட்டப் பெயர் பெற்ற மன்னனாவான்.

பாண்டியர்களுக்கும் அகத்திய முனிவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு சுலோகம்

अस्तम्भयत्क्षितिधरं प्रविजृम्भमाणं
अम्भसमस्तमपिबज्जलधेश्च यस्य |
कुम्भोद्भवो भवति यस्य मुनि: पुरोधसा
श्रीनिधिर्जयति पाण्ड्य नरेन्द्र वंश: ||

அஸ்தம்ப⁴யத்க்ஷிதித⁴ரம்ʼ ப்ரவிஜ்ருʼம்ப⁴மாணம்ʼ
அம்ப⁴ஸமஸ்தமபிப³ஜ்ஜலதே⁴ஶ்ச யஸ்ய |
கும்போ⁴த்³ப⁴வோ ப⁴வதி யஸ்ய முனி: புரோத⁴ஸா
ஶ்ரீநிதி⁴ர்ஜயதி பாண்ட்³ய நரேந்த்³ர வம்ʼஶ: ||

இதன் விளக்கம்:

விந்திய மலை வளருவதைத் தடுத்து, கடலத்தனையும் குடித்த, குடத்தில் பிறந்த குறுமுனி அகத்தியரைக் குலகுருவாகக் கொண்ட, மனிதர்களில் மாண்புடைய பாண்டிய மன்னர்கள் வாழ்க! செழுமையில் குறைவிலாத இவர் தம் வம்சம் வளர்க.

‘கடைச்சங்கத்தில் கடல் கடந்த கொங்கு கலாச்சாரம்’ என்ற என் நூலிலிருந்து.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *