மீ.விசுவநாதன்

DSC_03951-1024x777

காட்டுக் குள்ளே நடக்கின்றேன் – எழில்
கண்டு நானும் களிக்கின்றேன்
கூட்டுக் குடும்ப களிறுகளின் – நல்ல
துணிவும் உறவும் ரசிக்கின்றேன் !

குருவி, மைனா, பருந்துகளும் – கிளி,
கோட்டான், கொக்கும் அழகென்றேன் !
உருவிப் பறக்கும் காக்கையுடன் – குயில்
உருகிப் பாடும் ஒலிகேட்டேன் !

சருகுக் குள்ளே பாம்புடனே -தவளை
சறுக்கித் துள்ளிப் போகிறது !
கருகு மணிபோல் ஒருவண்டு – என்
காத ருகிலே பாய்கிறது !

மானும் புலியும் நீரருந்த – அந்த
மதகுப் பக்கம் வருகிறது !
தானும் இன்று இரையாவேன் – என்ற
தவிப்பில் மானும் விரைகிறது !

காட்டை ரசிக்கும் என்னாலே – ஏன்
நாட்டை ரசிக்க முடியவில்லை !
காட்டில் இருக்கும் ஒழுங்குமுறை – ஏன்
நாட்டு மனிதர் பழகவில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *