பவள சங்கரி

im20110164sivavakkiyar

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ?

– சிவவாக்கியர்

பொருள் :

ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் உன்னால் உன் மூலம் அறிய இயலுமா? ஒரு துளி நீரில் உருவாகி, கை, கால், கண், மூக்கு, செவி என பல உறுப்புகளும் தோன்றியது எங்கனம்? ஒவ்வொன்றையும் தோற்றுவித்து அனைத்தையும் இணைத்து ஓர் உருவமாய் அதைச் செயல்படச் செய்தது யார்? இதற்கும் மேலாக உயிர் என்ற ஒன்றை அதனுள் புகுத்தி, ஆன்மா என்றொரு சக்தியையும் ஒளித்து வைத்திருப்பதை அறிந்தவர் எவர்? இவ்வுயிர் அந்த உடலோடு கலப்பது எப்போது? எங்கனம்? உயிரினால் உடலெடுத்து அலையும் ஆணவத்தின் அரசனே பதில் கூறும்!

ஆம் நம் உயிரைச் சுமந்துத் திரியும் உடலின் ஆக்கத்தையே புரிந்துகொள்ள முடியாத அகங்காரமும், ஆணவமும் ஆட்டிப்படைக்கும் நிலையிலிருந்து மீண்டுவந்தால்தான் நம் பெருமூளை விரிவடைந்து இறைசக்தியை முழுமையாய் உணரும் பிரபஞ்சப் பார்வை விரிவடையும். ஆக, அகந்தையை அழிப்பது மட்டுமே இறை நிலையின் முதற்படி. இறைமையை உணரச்செய்வதும் இதுதான்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *