சேசாத்ரி பாஸ்கர்

at

இந்த மரம் ஒரு பச்சை புதிர் . ஆள்வார்பேட் தேசிகா சாலையில் உள்ளது .நல்ல தடிமனான அதன் அடிபாகம் ஒரு பெருத்த மரக்கல்.ஆனால் அதன் கிளைகளும் இலைகளும் ஒல்லியாக சின்னதாக இருப்பது ஆச்சரியம்.இந்த படைப்பு பற்றிய வியப்பு எந்த விடைக்கும் வழி சொல்லவில்லை.பாஷை புரியாதவன் பேந்த விழிப்பது போல நிற்க வேண்டியது தான்.வியப்புக்கு மேல் செல்ல முடியுமா தெரியவில்லை. என்னதான் விபத்தின் வடிவம் இதன் பிறப்பு என சொல்லி கொண்டாலும் இந்த பிரம்மாண்டம் ஒரு மயக்கம் தான்.இந்த ரசிப்பு எப்போதும் இருக்குமா அல்லது இது முதுகு தட்டி கொள்ளும் செயலா ? ஒரு அழுத்தமான நேரத்தில் என்னால் இந்த மரத்தை ரசிக்க முடியுமா ?மரத்தை பாராமலே இந்த உணர்வு வரின்அது என்ன ? பிரமாண்டம் உள்ளேயும் உண்டு போலும்.விஞ்ஞானம் உலகை சின்னதாக செய்கிறது.இந்த மரம் விஞ்ஞானத்தை சின்னதாக்குகிறது.

அது நாற்பதடி கடோத்கஜன்
கண் எட்டியவரை கிளைகள்
கீழே நின்றால் வானம்தெரியா
பச்சை இருட்டில் கோடாய் வெளிச்சம்
உடல்சிலிர்த்து சூரியன்காட்டும்
இலைகளின்இடையே மேகம்ஓடும்
காகம்குருவி காபந்து காட்டும்
வரம்ஒன்று இருப்பின் தினம்-
இதன் கனியாய் அடிக்கடி பிறப்பேன்
அதனுடன்இருப்பேன்
செயலறு என்றே மரங்கள் சொல்லும்
பேரானந்த பயித்தியங்கள் செவிமடுத்து
கேட்பதில்லை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *