சேசாத்ரி பாஸ்கர்

DSCN1937

இந்த வெயில் என்றில்லை.நமக்கு எப்போதும் தேவை பச்சை மரங்கள்.அவை பூமியின் புதல்வர்கள். குளிர்விக்க வந்த குட்டி தேவதைகள்.நம்மால் இயன்ற வரை மரங்களை பேண வேண்டும்.அவை நமக்கு என்றும் ஆதரவு.- மரங்கள் அடர்த்தியானால் சூரியன் உக்கிரம் குறையும்-.வாட்டும் வெயில் பூமியில் படர திணற வேண்டும். தனி நபர் முயற்சி, குழுக்களின் முயற்சி தாண்டி அரசு சட்ட ரீதியாக மரம் நடுதலை ஊக்குவித்தால் மனங்கள் குளிரும்.-மனம் குளிர்ந்தால் பதட்டமும் வன்மமும் கொஞ்சம் மறையும். அது தவிர மரங்கள் சப்தம் உள்வாங்கும் தன்மை கொண்டது.ஊரில் இரைச்சல் குறையும். பாண்டி பஜார் மற்றும் எஸ் ஐ இ டி கல்லூரி சாலை பக்கம் சென்று பாருங்கள் -நம் முன்னோர் செய்த நற்காரியம் இன்று பசுமை வ்யாபித்து இருக்கிறது.-கட்டிடங்கள் கட்டும்போது நாலு மரங்களை நட்டால்தான் சான்றிதழ் என்ற நிலை வர வேண்டும். முன்னர் தமிழ்நாட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது போல இந்த மரங்களை பெருக்கினால் மழை பெய்ய நல்ல வாய்ய்பு.ஒரு சின்ன கணக்கு. இன்று ஆளும் கட்சி பெரும் தொண்டர் படை கொண்ட ஒன்று . முதல்வர் தனது தொண்டர்களுக்கு மரங்களை வளர்க்க ஒரு அன்பான வேண்டு கோள் இட்டால் இது பெருஞ்சாதனயாக திகழும்.–நல்ல அக்கறையுள்ள நபர் யாரவது இதை முதல்வரிடம் சொல்ல முடியும் எனில் அவர் இதனை ஏற்றுக்கொள்வார். சமூக காடுகள் திட்டம் செம்மைப்பட வேண்டும் -மயிலை சட்டமன்ற உறுப்பினரிடம் இது குறித்து பேச உள்ளேன்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது .கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் தெருவின் இரு பக்கமும் நல்ல மரங்கள் இருப்பின் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? பறவைகள் சுகம் பெறும்.கறவைகள் இளைப்பாறும்.ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து அண்ணாந்து பாருங்கள்.உலகம் பிறந்தது எனக்காக பாட்டு பாடுவீர்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.