பவள சங்கரி

1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய வெண்பா மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:

அடிசிற் கினியாளை அன்புடை யாளை
படிசொற பழிநாணு வாளை … அடிவருடி,ப்
பின்தூங்கி முன்னெழூஉம் ப யான்பிரிந்தால்
என்தூங்கும் என்கண் எனக்கு.

பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் அன்றாடம் வைத்துக்கொண்டிருந்தாராம்! காலம் முழுவதும் விளங்காமலே செய்த பணிவிடைக்கு தமது உயிர்பிரியும் இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டாராம் அம்மையார்..

images
அதாவது, ஐயனுக்கு உணவு பரிமாறும்போது சாதப்பருக்கை கீழே இறைந்துவிட்டால் அதை ஊசியால் எடுத்து தண்ணீரில் அலம்பி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்காக வைக்கச்சொன்னாராம். ஆனால் இறுதிவரை ஒருநாள் கூட அதற்கான தேவை ஏற்படவேயில்லையாம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாசுகியாயணம்!

  1. ஆகா! அருமையான நறுக்! துணுக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.