விவேக்பாரதி

தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் 
   தந்ததன தந்தனம் – தந்ததானா ! 

முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் 
…முந்திவர வென்றதும் – தன்றனோடு 

முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் 
…முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !

துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! 
…துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் 

துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் 
…துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !

கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் 
…கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் 

கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங் 
…கண்டவிட மன்னனின் – சம்புமாரி !

சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் ! 
…சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச் 

சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ் 
…சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி ! 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.