உமையாள் திருப்புகழ் – 6
விவேக்பாரதி
தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் – தந்ததானா !
முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம்
…முந்திவர வென்றதும் – தன்றனோடு
முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம்
…முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !
துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் !
…துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத்
துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன்
…துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !
கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங்
…கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங்
கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங்
…கண்டவிட மன்னனின் – சம்புமாரி !
சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் !
…சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச்
சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ்
…சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி !