-மலர் சபா

மதுரைக் காண்டம்அழற்படு காதை

பிராமண பூதம்

பசுமையான முத்துவடம் பூண்ட நிலவுபோல்
மிக்க ஒளி பொருந்திய உடல் உடையவன்;
ஒளிரும் முத்துகளால் செய்த அணிகள் அணிந்தவன்;
வெண்தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டைப்பூ
இவற்றைத்தன் தலையில் அணிந்தவன்;

நுட்பமான நுரை போன்ற             brahmin
மெல்லிய ஈர ஆடையைத்
தன் மேனியில் அணிந்தவன்;
மலராத வட்டிகை, விளம்பொரி,
வன்னிகை, சந்தனம், கொட்டம் ஆகிய
வாசனைப் பொருட்களைச்
சேர்த்து அரைத்துப்பூசிய மார்பை உடையவன்;

தேன், பால், சர்க்கரை ஆகியவற்றைச்
சேர்த்துச் சமைத்த அன்னத்தை உண்பவன்;
தீர்த்தக்கரைகளிலும், தேவர் கோவில்களிலும்,
வேத பாடசாலைகளிலும் மனம் லயித்து நிற்பவன்;
பின்பகல் பொழுதில் இறைவனைச் சந்தித்தால்
உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல்
மண்ணில் காலூன்றி நிற்பவன்;

விரிந்த குடை, கமண்டலம்,
வேள்விக்குச்சி, தர்ப்பைப்புல்
இவற்றைக் கையில் கொண்டுள்ளவன்;
நாவில் வேத நூலையும்
மார்பில் பூணூலையும் பூண்டவன்;

மூன்றுவகை வேள்வித்தீயையும் போற்றித்
தனக்குரிய நெறியிலிருந்து தவறாத
மறைமுதல்வன் பிரம்மன்
வேள்விக்கென வகுத்த உறுப்புக்களோடு அமைந்த
பிராமணப் பூதங்களுக்குத் தலைமையான
பிராமணப் பூதக் கடவுளும்…

***

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.