– சித்ரப்ரியங்கா ராஜா,  திருவண்ணாமலை

 

apj

 

அழகிய மழலையாய் அவதரித்தாய்
அக்னிச் சிறகு நாயகனே இன்று
ஆனந்தத்திற்கோ அளவில்லை
அ கலாம் நீ எங்களுடனே என்று
அன்னை உனையும் ஈன்றிருக்கலாம்
அள்ளி உச்சி தான் முகர்ந்திருக்கலாம்
அல்லல் மறந்துனை வளர்த்திருக்கலாம்
ஆ! என் மகனென வியந்திருக்கலாம்
அயராது நீயும்  உழைத்திருக்கலாம்
அணுஆற்றலை நீ அசைத்திருக்கலாம்
அகிலமும் அதனால் அதிர்ந்திருக்கலாம்
அய்யனே நீ தானே எங்கள் அ  கலாம்!
ஆகாயத்திற்கு நீயும் விண்கலன் அனுப்பி
அணு விஞ்ஞானியாய் உயர்ந்த கலாம்
அவனியில் பலரும் வியந்திடத் தானே
அறிவழகனாய் பவனி வந்த கலாம்
அ கலாமாய் நாங்களும் ஆகிடத் தானே
ஆர்வம் பலருக்கும்  நீ அறிவாய்  ஐயா
அன்று நீ எங்களுக்கு இயம்பிய சொல்லே
ஆழமாய்ப் பசுமரத்தாணி போல் மனதுள்
அண்ணலே உன் பிறந்த நாளில் தானே
ஆவலுடன் உறுதி பூணுவோமே நாங்கள்
அன்னை பாரதமுமே வல்லரசாய் மாற
ஆற்றுவோம் பணி உன் வழியில் எனவே
அய்யனே உன் பிறப்பு அழகிய சரித்திரமே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *