பா.ராஜசேகர் கவிதை

பா.ராஜசேகர்  

மாடியிலிருந்து
கால்வாய்வரை
நீர்தேங்காமல் வழிவிட்டேன்.
மாநகராட்சி அதிகாரிகள்
கால்வாயிலிருந்து ஆறுவரை
சுத்தம் செய்தார்கள்.
பிறகு ஆற்றைதூர்வாரி
கடலுக்கு வழிவிட்டார்கள்.
இப்போது
மழைபெய்து கடல் வயிறு
நிரம்பிக்கொண்டிருக்கிறது.
இனிமேல்தான்
நான் கடல்நீரில்
பயிர்விதைத்து அறுவடைக்கு
முயற்சிக்கவேண்டும்.

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *