ஆழ்ந்த இரங்கல்கள் …
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல்கள். அம்மையார் நேற்று இரவு (05/12/2016) 11.30 மணிக்கு இறையடி சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. இயற்கை அன்னையின் மடியில் நிரந்தரமாக உறங்கச்செல்லும் அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

