கலைச்செல்வி ஜெயலலிதா நல்ல கீர்த்தி கற்பூர புத்தியுடன் துணிவும் கொண்ட தலைவியென தமிழ்நாட்டை ஆண்ட போதும் தரணியே மெச்சுகின்ற அம்மா வானார் ! அலையலையாய்ப் புதுத்திட்டம் போட்டு ஏழை அடிவயிற்றுப் பசிதன்னை போக்கி வந்தார்! நிலையெனவே அவர்புகழ்தான் ஓங்கி மக்கள் நெஞ்சினிலே பல்லாண்டு அம்மா வாழ்வார் !
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.