கற்றலும் வீட்டுச் சூழ்நிலைகளும்–  (8)

education-2

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி. பள்ளியிலே மிகச் சிறப்பாகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனின் மதிப்பெண்கள் திடீரென குறைய ஆரம்பித்தது மட்டுமின்றி வகுப்புக்களில் அவனுடைய கவனமும் குறைந்து காணப்பட்டது. இதைப்பற்றி ஆசிரியர்கள் பள்ளி முதல்வரிடம் கருத்துத் தெரிவித்த பொழுது அந்த மாணவனுடைய பெற்றோரிடம் இதை பற்றி பேசினால் என்ன என்று தோன்றியது. சந்தர்ப்பவசமாக அந்த மாணவனுடைய தந்தை அடுத்த தினம் பள்ளியிலே முதல்வரைப் பார்க்கத்  தானாகவே வந்திருந்தார். முதல்வர் அதைப்  பற்றி பேசுவதற்கு முன்பாகவே அவர் தனது பையிலிருந்து தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் பள்ளியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைக் கொண்டுவந்திருந்தார். தான் வெளியூரில் வேலைக்குச் செல்வதால் தனது குழந்தைகளை தம்முடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால், அதே தினம் மதியத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் தாயாரோ, அவரது கணவர் பள்ளியிலிருந்து குழந்தைகளை எடுப்பதற்கான கடிதம் கொணர்ந்தால் அதை பெற்றுக்கொள்ளவேண்டாமென்றும், தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமையின் காரணமாகவே அவர் செய்வதாகவும் கூற, அப்பொழுது அந்தக் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப் பட்டத்திற்கான உண்மையான காரணம்.

மாணவர்களின் கற்றலை பெற்றோர்களின் ஒற்றுமை, பிடிவாதங்கள், தகராறுகள், பழக்க வழக்கங்கள் மிக அதிக அளவில் பாதிக்கின்றன. ஆகவே, தங்களுக்குள் ஏதாவது கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், சில நேரங்களில் அவை விஸ்வரூபம் எடுத்து சட்ட ரீதியான தீர்வுக்குள் கட்டுப்பட்டிருந்தாலும், பெற்றோர்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தப்பாதிப்புக்களின் தாக்கங்கள் அவர்களை பாதிக்காத அளவில் பார்த்துக்கொள்ளுதல் மிக அவசியம்.

“it is easier to bring strong children, than to repair broken men” என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.’உடைந்த மனிதர்களை சரிசெய்தவிட, வலுவான குழந்தைகளை வளர்த்தல் எளிதானது”.  இது முற்றிலும் உண்மை. இந்த வலுவான குழந்தைச் செல்வங்களை உருவாக்குவதில் வீட்டுச்சூழ்நிலைகளின் பங்கீட்டின் விழுக்காடு மிக அதிகமானது. இதை பெற்றோர்களும் வீட்டுப் பெரியவர்களும் உணர்ந்து செயல்படுதல் அவசியம்.

ஒரு பள்ளியிலே இறுதி ஆண்டிலே படிக்கின்ற ஒரு மாணவனின் அரையிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்ததற்காக முதல்வர் அந்த மாணவனுடைய தந்தையை அழைத்தார். அவர் ஒரு பெரிய வியாபாரி, அவரோ முதல்வரின் முன்னால் அந்த மாணவனை தரக்குறைவாகப் பேசி திட்ட, பொறுமையாக இருந்த மாணவன், தந்தை பேசி முடித்ததும். ‘ இவ்வளுவுதானா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?” என்று தந்தையைப் பார்த்துக் கேட்டுவிட்டு முதல்வரிடம் “சார், என்னுடைய அம்மா சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார்கள். இவரோ தினசரி மாலையிலே வீட்டில் உட்கார்ந்து குடிப்பதுமட்டுமின்றி, யார்யாரையோ வீட்டுக்கு கூட்டிவந்து கும்மாளம் செய்கின்றார். நான் எப்படி நிம்மதியாகப் படிப்பேன்?” என்று சொன்னபோது, முதல்வரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சில நேரங்களில் உண்மை மிகக் கசப்பாக இருக்கும். அவைகளை சந்திப்பதற்குக் கூட தயக்கம் ஏற்படலாம். ஆகவே பல நேரங்களில், வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவனுடைய உள்ளுணர்வுகளையும் திறன்களையும் நிர்ணயித்தல் தவறாக அமையலாம்.

டாக்டர் டோரோதி லா நோல்டே என்பவர் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கீழ்க்கண்ட வார்த்தைகள் எல்லோராலும் போற்றப்படுபவை

If children live with criticism, they learn to condemn.

If children live with hostility, they learn to fight.

If children live with fear, they learn to be apprehensive.

If children live with pity, they learn to feel sorry for themselves.

If children live with ridicule, they learn to feel shy.

If children live with jealousy, they learn to feel envy.

If children live with shame, they learn to feel guilty.

If children live with encouragement, they learn confidence.

If children live with tolerance, they learn patience.

If children live with praise, they learn appreciation.

If children live with acceptance, they learn to love.

If children live with approval, they learn to like themselves.

If children live with recognition, they learn it is good to have a goal.

If children live with sharing, they learn generosity.

If children live with honesty, they learn truthfulness.

If children live with fairness, they learn justice.

If children live with kindness and consideration, they learn respect.

If children live with security, they learn to have faith in themselves and in those about them.

If children live with friendliness, they learn the world is a nice place in which to live.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.