காற்றின் அலகுகள்
முல்லைஅமுதன்
காற்று
தன் அலகுகளால்
தலையினை
துளைத்தபடி
எதையோ தேடியது.
கிடைத்ததை சப்பி தின்று
தூர எறிந்தது.
அவைகள் சுவரில் ஒட்டிக்கொண்டது
என் கவிதைகளாய்.
மீதமிருத்த உடலை
என்ன செய்யலாம் என்று தீர்மானித்த பொழுதின் முடிவாய்
கட்டித் தொங்கவிட்டு
தற்கொலை என்றெழுதியது.
எனி
கவிதை எழுதாபொழுதுகள்
அவர்களுக்காய் விடியும்.
