மீ.விசுவநாதன்

உதிரத்தைப் பாலாகத் தந்தாள் – தாய்
உணர்வோடு தாய்நாடு என்னும் – நல்
உயர்வினைச் சிந்தையில் வைத்தாள் !

அதிஞானம் பெற்றாலும் என்றும் – மன
அகங்காரம் கொள்ளாத பண்பால் – உள
அமைதியைப் போற்றிடு என்றாள் !

அதிராத வார்த்தையைப் பேசி -நீ
அன்போடு தேசத்தை நேசி -என
அறிவிலே தெளிவினைத் தந்தாள் !

புதிரான புவனத்தில் நித்தம் – புதுப்
பூப்போலே ஆனந்த மாக – நீ
பொலிகவே பொலிகவே என்றாள் !

கொடிதன்னில் தேசத்தைப் பாரு – அதன்
குலம்வாழக் காத்திடுவாய் நீடு – எனும்
கொள்கையை என்னுளே வைத்தாள் !

கொடிதன்னில் பூத்திருக்கும் பூப்போல் -இங்கு
குடிவாழும் உயிர்க்கூட்டம் என்று – நற்
குருவென ஞானமே தந்தாள் !

கொடிதான காரியங்கள் செய்யும் – தீக்
கூடத்தின் வேர்நீக்கு என்றே – தொப்புள்
கொடியிலே சத்தியம் பெற்றாள் !

கொடிதெய்வம் என்கின்ற எண்ணம் – சிறு
குழந்தையாய் இருக்கின்ற போதே – என்
உளத்திலே பதித்தவள் சென்றாள் !
( 25.01.2017 20.45 pm)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““தேசத்தை நேசி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *