எங்கும் மங்கலம் பொங்குக!
பவள சங்கரி
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்,
தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள்
நோக்குவான்; நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன்—கச்சி ஏகம்பனே.
அப்பர் சுவாமிகள்
காசு அணிமிங்கள், உலக்கைஎல்லாம் காம்பு அணிமிங்கள் கறைஉரலை
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி,
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
பாச வினையைப் பறித்து நின்று, பாடி பொற்கண்ணம் இடித்தும் நாமே!
மாணிக்கவாசகப் பெருமான்