( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

 

முதியோர் இல்லமதில் தாய்

முறுவலுடன் விழாவதனில்  சேய்

தனியாகத் தவிக்கிறாள் தாய்

தானமெலாம் செய்கிறான் சேய் !

 

பலலட்சம் வைத்துள்ளான் சேய்

பரிதவித்து நிற்கிறாள் தாய்

பட்டம்பல பெற்றுவிட்ட சேய்

பாருக்குள் இருப்பதுதான் ஏன் !

 

விரிவுரை பலசெய்து விருதுகள் பலபெற்று

கருணையை காட்டிநிற்கும் காவியம் பலகாட்டி

தெருவெலாம் வரவேற்பு தினமுமே பெறுவதற்கு

பலநூறு செலவுசெய்யும் பாங்கினைநாம் என்னசொல்ல !

 

ஊட்டி வளர்த்தவளை ஒருகணமும் நினையாமல்

போட்டி பொறாமையொடு புகழ்தேடும் கனவான்கள்

சேற்றிலே வீழ்ந்துள்ள சீரழிவைக் காண்கையிலே

நாட்டிலே இருப்பதனால் நன்மையென்ன இருக்கிறது !

 

பட்டம் பலபெற்றாலும் பதவிகளில் உயர்ந்தாலும்

கெட்ட குணமுள்ளவரை அத்தனையும் வீணாகும்

நட்டம் பலவந்தாலும் தான்நொடிந்து போனாலும்

இட்டமுடன் எமைக்காத்த எந்தாயை இகழுவதா !

 

தாயினைத் தெய்வமாகத் தரணியில் போற்றவேண்டும்

தாயினை தாங்கிநின்றி தாழ்பணிந்திருக்க வேண்டும்

தாயின் ஆசிபெற்று தரமான வாழ்வுவாழ

தாயினை வீட்டில்வைத்து தான்நிதம் மகிழ்ந்துவாழ்வோம் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *