யாரோ ஒருத்தி

 

ஒரு கணப்பொழுதெனினும்
பயம் பற்றிய சிந்தனை
வந்து போகவே செய்யும்.
அர்ச்சகரை முறைத்துப் பார்க்கையில்,
முகச் சவரம் செய்கையில் அந்தக் கத்திக்கு…
தொடர்ந்துப் பயணத்தில்
யாரோ ஒருத்தி
சிலிர்த்துவிட்டுப் போகையில்…
நடு வீதியில் மகிழூர்தி
முரண்டுபிடிக்கையில்…
கதவு திறந்து
காலணியைக் கழற்றுகையில்
அடுக்களையில்
கோபத்தில்
பாத்திரத்தை உருட்டும் மனைவியிடம்…
இன்னும் ..இன்னும்
பயம் சொல்லி வருவதில்லை..
பிதாவே!
உனது பயமும் நாம் அறிவோம்..
மன்னித்தருள்கிறோம்..
மறுபிறப்பில்
என்னைப்போலவே பிறப்பீராக…
முல்லைஅமுதன்

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *