சி. ஜெயபாரதன், கனடா
ஒன்று எங்கள் தேசமே
ஒருமைப் பாடெமது மோகமே
உதவி செய்தல் வேதமே
உண்மை தேடலெம் தாகமே
இமயம் முதல் குமரிவரை
எமது பாதம் பதியுமே.
தென்னகத்தின் முப்புறமும் நீல
வண்ணக் கடலே.
வடக்கில் நீண்ட மதிலாய்
வான்தொடும் இமயம்
ஓங்கி உயர்ந்து காக்குதே.
எந்தையும் தாயும் பல்லாண்டு
இனிதாய் வாழ்ந்த தேசமே !
எங்கள் ஊனும் உயிரும்
இராப் பகலாய்
உழைத்து உன்னைக் காக்குமே !
எங்கள் மூச்சும் பேச்சும்
என்றுமுன் பெயர் ஒலிக்குமே !
பாரத தேச மென்றால்
பூரண உணர்ச்சி பொங்குதே !
சுதந்திரத் திருநாடே !
பங்கம் உனக்கு நேரின்
எங்கள் உதிரம் கொதிக்குமே !
++++++++++++++


Leave a Reply