மலர்சபா

 

மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை

 

வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு
பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல்

 

‘வளமையான தமிழ் அறிந்த அந்தணர்க்கு
வான் உறை தந்த
வலிமையான் நீண்ட வேலினை உடைய
சேரமன்னனைக் காண்பேன்’ என்று கூறிக்
காடுகள் நாடுகள் பல கடந்து
உயர்ந்த நிலையில் உள்ள
பொதியின் மலை அடைந்து

ஆங்கே

ஒன்று புரி கொள்கை
இரண்டு பிறப்பினை உடையவரும்
மூன்று வேள்வி
நான்கு மறை
ஐந்து பெருமையுடைய
வேள்விகள் செய்யும் தொழிலைப் பேணும்
ஆறு தொழிலுடைய அந்தணர்
பெறுகின்ற முறையை
அந்தப் பராசரனுக்கு
வகைப்படுத்திக் கொடுக்க…

நாவாலே தருக்கம் செய்து வெற்றி கொண்டு
பகைவர்களை ஓடச் செய்து
பார்ப்பன வாகை சூடி
பொருத்தமான அணிகளைப் பெற்றுத்
தன் ஊருக்கு மீண்டு செல்வோன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *