முனைவர். கோ. வசந்திமாலா

தமிழ்த்துறைத் தலைவர்

கலைப்புல முதன்மையர்

நேரு கலை அறிவியல் கல்லூரி

கோவை 105

 

பட்டங்கள் ஆளப்

பிறந்தவர்கள்!

பட்டுத்திய பாவையர்கள்

என்று!

 

என் பாட்டுக்

கவிஞன் கவிதைப் பட்டறையில்

பதுமைகளாய் செதுக்கி

வைத்தான்!

 

உயிர் பெற்று

சிங்கார நடை பயின்று

சித்திரம் வரைவதை

என் கவிஞன் எங்கோ

இருந்து கண்டு

பரவசம் கொள்கிறான்

இன்று!

 

ஆணுக்குப் பெண்

அடிமையில்லை என்று

என் கவிஞனின் குரல்கேட்டு!

 

உறங்கிக் கிடந்த

உண்மைகள் எல்லாம்

உயிர் பெற்று நடமாடுவது

போல்!

மெய்ப்பிக்கிறது இன்றைய பெண்மை!

 

சமையலறை சங்கடங்கள்

எல்லாம் மண்டியிட்டு

மறைந்து கொட்ட

சாணிதட்டி கருகு பொருக்கி

சாய்ங்காலம் வீடு

வந்து சங்கடமின்றி

சேவை செய்தோம் அன்று!

 

கணினி தட்டி

முகநூலில் முகமும் காட்டி!

இன்று

தாயகி தாதியாகி

தோழியுமாகி சில நேரம்

தகப்பனும் மாகி

தரணி போற்ற

பரணி பாடப்பெறும்

பெண்மையை என்

கவிஞன் எங்கோ

ஓர் மூலையில் நின்று பார்க்கிறான்! காரணம்

 

அவன் கவிதைகள் எல்லாம்

கால் முளைத்து நடமாடுகிறது

இன்று!.

 

நிமிர்ந்த நன்னடை

கொண்டு நவீனம்

படைக்கும் பெண்மை

என்று!

 

என் கவிஞன்

பாடிய கனவுகள் எல்லாம்

கண்ணியமாய் செயலாக்கம்

பெறுதல் கண்டு!

 

வாயடைத்த என் கவிஞன்

வளரும் புது பெண்மை

காணுகின்றான்!

எங்கோ ஓரிடம் நின்று!

 

நாணமும் அச்சமும்

நாய்களுக்கும் நரிகளுக்கும்

வேண்டுமாம் ஞானமும்

நல்லறிவும் வீரம், இசை

இவை எல்லாம்!

 

புறநானூற்றுத் தாயின்

பரம்பறையில்

முறத்தாலே புலியை விரட்டிய

மூத்தவளின் வழி வந்த

பெண்மை இன்று!

 

முழு அறிவு நட்குடி

பெண்ணின் நற்குணங்கள்

என்று என் கவிஞன்

பாடிய பாடல்கள் எல்லாம்

பவனி வரும் எல்லாம்!

 

இவ் பவனி வரும்

விழாவில்! ஏதோ

ஒரு மூலையில்

நின்று காண்கின்றான்

என் கவிஞன்!

 

பார் போற்றும்

சக்திக்கு கவி

பாடிய என் கவிஞன்

பாவையர் எல்லாம்

பாராண்டு ஊர்போற்றும்

சக்தியானது இன்று!

 

என் பாரதி எங்கோ

ஒரு மூலையில்

ஆனந்தக் கண்ணீரில்

அதிசயப் பராசக்திக்கு

அபிசேகம்

செய்கின்றானோ?

வாழ்க என் கவிஞன் பாரதி!!!…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *