நான் மரம் பேசுகிறேன்.!

0

 

 

எண்ணிலா
என் இலைகளால்
மானிடனே
உன் சுவாசத்திற்காய்
நான் .!

என் கிளைகளில்
ஊஞ்சல் கட்டி
ஆடியே சிரித்தாய்
உன்னுடன் நானும்
சிலிர்த்தேன்.!

அணில் கடித்த
பழத்தையும் உனக்காய்
சுமந்தே நின்றேன்
ருசித்து நீ உன்ன
ரசித்தே நான்.!

அன்னை மடிபோல்
எந்தன் அடியில் உறக்கம்
தென்றலாய் நான் வீச
அசந்து நீ தூங்க
அசையாமல் நான்.!

உனக்கே என்னை
முழுதும் அளித்தேன்
மானிடா
என் உயிர் மூச்சை
மட்டும் அறுத்து விடாதே
அடுத்து உன் வம்சத்தின்
குலக் கொடிகளை
காணும் ஆவலில்
நான்..
நான் மரம் பேசுகிறேன்.!

விஜயகுமார் வேல்முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.