ராஜகவி ராகில்

 

நான் ஓட்டை விழுந்த கம்பல்ல

புல்லாங்குழல்

 

உன் உளி தொடும் வரை

கல்லாய்க் காத்திருக்கிறேன் நான்

 

நான் செய்வதை நிழலும் செய்தது

பொம்மை வெறுத்தேன்

 

கல் வீசியும் விழாத மாங்காய்

என் கனவில் விழுந்து கிடந்தது

 

கண்ட கனவை

காலையில் கட்டிலில் தேடினேன் நான்

 

உன் அழகு குளிர்த் தேநீர்

என் கண் குவளையில் ஊற்றி அருந்துகிறேன் நான்

 

சொற்களால் என்னைக் கிழித்த நான்

சொற்களால்தான் தைக்கிறேன்

 

நான் நீர்க் குமிழி

என்னை உடைத்து விடாதீர்கள்

 

நான் பட்டாம் பூச்சி

பூவென்று நினைத்து சிலந்தி வலையில் அமர்ந்து விட்டேன்

 

நீ விளக்கேற்றினால்

எரியும் எனது இருள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *