ரா.பார்த்தசாரதி              

நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது 

ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது  பழமொழி 

நல்லவர்களது  நட்பு என்பது  வளர்பிறை போன்றதாகும்

தீயவர்கள்     நட்பு  என்பது  தேய்பிறை  போன்றதாகும் !

 

நட்பு  என்பதின்   அடிப்படை அன்பும், நம்பிக்கையுமே 

பழக, பழக  ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையே,

பண்புடையோர் நட்பு என்றும்  இன்பம் தரும் 

பண்பிலார்  நட்பு  என்றும்  துன்பத்தை  தரும் !

 

ஒத்த உணர்ச்சியே  ஒருவனின்  நட்பினை பெருக்கும் 

 மாறுபட்ட  உணர்ச்சியே  ஒருவனின் நட்பினை விலக்கும் 

 ஆடை  அவிழும் போது மறுகை  தானாகவே பிடித்திழுக்கும் 

நல்ல நண்பனின் உதவியும் தானே தேடி வரும் !

 

நட்பிற்கு இலக்கணம், பிசிராந்தையார், கோப்பெருங்சோழன்

 நட்பிற்கு இலக்கணம் ஒளவையாரும், அதியமானும் 

உலகில்  தவிர்க்க முடியாதது  பந்தமும், பாசமும்,

உலகில்   பிரிக்கமுடியாதது  உறவும்,  நட்பும்  !

             

அண்டை மாநிலத்துடன் நட்பாய் இருந்தால் பிரச்சனைகள் தீரும் 

ஒருவர்க்கொருவர் நேசமும், நட்பாய் இருந்தால் நன்மைகள் பல.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் ! என்பது   பழமொழியாகும் 

 நட்பு தினத்தன்று, நட்பை பாலமாக, அமைப்பதே புது மொழியாகும் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *