நட்பு தினம்
ரா.பார்த்தசாரதி
நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது
ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது பழமொழி
நல்லவர்களது நட்பு என்பது வளர்பிறை போன்றதாகும்
தீயவர்கள் நட்பு என்பது தேய்பிறை போன்றதாகும் !
நட்பு என்பதின் அடிப்படை அன்பும், நம்பிக்கையுமே
பழக, பழக ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையே,
பண்புடையோர் நட்பு என்றும் இன்பம் தரும்
பண்பிலார் நட்பு என்றும் துன்பத்தை தரும் !
ஒத்த உணர்ச்சியே ஒருவனின் நட்பினை பெருக்கும்
மாறுபட்ட உணர்ச்சியே ஒருவனின் நட்பினை விலக்கும்
ஆடை அவிழும் போது மறுகை தானாகவே பிடித்திழுக்கும்
நல்ல நண்பனின் உதவியும் தானே தேடி வரும் !
நட்பிற்கு இலக்கணம், பிசிராந்தையார், கோப்பெருங்சோழன்
நட்பிற்கு இலக்கணம் ஒளவையாரும், அதியமானும்
உலகில் தவிர்க்க முடியாதது பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்கமுடியாதது உறவும், நட்பும் !
அண்டை மாநிலத்துடன் நட்பாய் இருந்தால் பிரச்சனைகள் தீரும்
ஒருவர்க்கொருவர் நேசமும், நட்பாய் இருந்தால் நன்மைகள் பல.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் ! என்பது பழமொழியாகும்
நட்பு தினத்தன்று, நட்பை பாலமாக, அமைப்பதே புது மொழியாகும் !
