காளி

27-1427456108-kali1

கொட்டும் குருதியினை நாவில் வைத்தும்

கொய்த தலையினைக் கையில் வைத்தும்

கூரிட்ட அரக்கத்தைக் காலில் வைத்தும்

கூப்பிட்ட குரலுக்குக் குறைதீர்க்க வருபவளே !

,

கண்ணில் நெருப்பைக் கக்கியே வந்ததாய்

கைகளில் ஆயுதம்  ஏந்தியே வந்தாய்

கபாலங்கள் அணிந்தே காட்சியைத் தந்தாய்

கருணை மழையே  கண்களில் நிறைந்தாய்!

 

சந்தனத்தைச் சாத்தியதும் சாந்தமாய் நிற்பவளே

செங்குருதி நீராட்டல் சிங்காரி உனக்கெதற்கு ?

செவ்வரளிப் பூவாலே சீருடைகள் செய்திடுவேன்

சடுதியில் வந்திடுவாய் சங்கடங்கள் போக்கிடவே !

 

பாலோடு தேனும் பருகிடவே பானகமும்

பல்சுவை விருந்தோடு பரிமள நறுமணமும்

எண்ணை விளக்கும் எலுமிச்சை மாலையும்

என்னவளே தந்திடுவேன் ஏற்றிடுவாய் மனமிரங்கி !

 

பயந்த பார்வையை பைரவியே விரட்டிடுவாய்

மருண்ட மனதை மகிடனாய் கொன்றிடுவாய்

காரிருள் கலக்கத்தை காளியே! விலக்கிடுவாய்

பாரினில் ஈடுண்டோ பராசக்தி பயங்கரியே !

 

தாயென அழைத்தேன் தணிந்திடு கோபம்

சேயென அணைத்திடு சிந்தையில் நித்தம்

இராத்திரி நேரம் கொலுவினில் வேண்டும்

இசையுடன் அழைப்பேன் இனிதே வருவாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *