விடிவெள்ளி விவேகானந்தர்
-தேனுகா மணி
மானுடம் போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்
இளைஞர்களே
என் நம்பிக்கை என்றார்
இறையனுபவத்தால்
இவ்வுலகை வென்றார்
மனதின் நிறம்
வெண்மை என்றார்
அதன் மார்க்கம்
சுயநலமின்மை என்றார்
உறங்கும் ஆத்மாவை
எழுப்பு என்றார்
உண்மைகளின் இயல்பே
உன் இருப்பு என்றார்
அனைத்தையும் அளிப்பது
அன்பு என்றார்
அன்னையைப்போல்
அதனை நம்பு என்றார்
நமக்குத்
துயரத்தை அளிப்பது
அச்சம் என்றார்
அதை அகற்றுவது
ஞானத்தின் வெளிச்சம் என்றார்
எதிர்மறை எண்ணங்களைத்
திசை திருப்பு என்றார்
எதிரிகளை எரிக்கட்டும்
சத்தியத்தின்
நெருப்பு என்றார்
தனித்தன்மை
தன்னம்பிக்கை தேவை என்றார்
இவை இரண்டும்
இருப்பவனே
செய்வான் சேவை என்றார்
இருபுயம் விரிவடைந்தால்
வீரம் பிறக்கும் என்றார்
இருதயம் விரிவடைந்தால்
ஞானம் உதிக்கும் என்றார்
இவை…
விவேகானந்தரின் வாக்கு
அவ்வழியே இருக்கட்டும்
நம் நோக்கு
நம் சிறுதுளி
வெள்ளமாகட்டும்
நம் சிறுபொறி
வெளிச்சமாகட்டும்
அதுவும்…
மக்களைக் காக்கட்டும்
மானுடம் போற்றும் வேந்தர்
விடிவெள்ளி விவேகானந்தர்