பிட்காயின் அபாயம்!

0

பவள சங்கரி

தலையங்கம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிட் காயின் மூலமாக நடத்தப்படும் வணிகத்தை ஒழுங்குபடுத்தவில்லை என்றும் அதன் மூலம் முதலீடு செய்வதற்கு எதிராக மக்களை எச்சரித்துள்ளபோதிலும், பிட் காயினின் விலை, 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, 8,400 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 2013 ஏப்ரல் 28 ஆம் தேதி, இருந்த விலையான 7,304.24 ரூபாயிலிருந்து, தற்போது 6,26,396.07 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கண்மூடித்தனமான விலை உயர்வே இந்திய முதலீட்டாளர்களிடையே ஒரு புதிய அதீதமான கவர்ச்சித் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில் பிட் காயின் பயன்படுத்தி எதையும் வாங்க முடியாது. குறைந்தபட்சம் இந்தியாவிலாவது, பிட்காயின் ஏற்றுக்கொள்வது குறைவாக இருந்தாலும் மக்கள் இதை ஒரு அனுமானத்தில் அன்றி பரிவர்த்தனைக் கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் வாங்குவதில்லையாம்..

பங்குச்சந்தையில் இறக்கம் ஏற்பட்டால், முதலீட்டு பணம் போனதுதான். மூலதனச் சந்தை, மியூசுவல் நிதி போன்றவைகள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்திய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (Securities and Exchange Board of India, the Insurance Regulatory and Development Authority of India) ரிசர்வ் வங்கி போன்றவைகள் வங்கி முறைமையை ஒழுங்குபடுத்துவது போன்று பிட் காயின்களுக்கு எந்த கண்காணிப்பும் இல்லை என்பதை மக்கள் கருத்தில் கொள்வது அவசியம். முதலீட்டாளர் ஏதேனும் ஒரு மோசடியான பிட்காயின் பரிமாற்றத்தில் முதலீடு செய்ய நேர்ந்தாலும் எந்தவொரு அரசாங்கத்தையும் அவர்கள் அணுகவோ, பணத்தைத் திரும்பப்பெறவோ முடியாது.

இந்திய அரசினால் தடையுத்தரவு போடப்பட்டால், இந்த பரிமாற்றங்கள் எந்த நேரமும் மூடப்பட வேண்டிய சூழலில் முதலீடு செய்த பணத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *