images (2)
°°°°°°°°°°°°°°°°°°

காட்சிக் கினிய கண்கவர் அழகொடு
மாட்சி பொருந்திய வல்லமை யுடைய
தாட்சி யோடு வானோர் பணிய
மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்!

ஞானம் கொண்ட மரியாள் மைந்தன்
வானத் தளவு கருணை கொண்டு
தேனினை யொத்தநல் கருத்து களோடு
போதனை செய்து காலம் கழித்தார்!

பன்னிரு சீடர் பக்கத்தில் இருக்க
பரிவுள்ளம் கொண்டு மானிட குலத்தின்
பாவச் செயல்களைப் போக்கி மீட்டு
பரிசுத்தம் அடைய வழிவகை செய்தார்!

போதனை விரும்பா உரோம அரசு
யூத மதத் தலைவரொடு சேர்ந்து
யூதாசையணுகி முப்பது வெள்ளி கொடுத்து
ஏசுவைக் கொல்லத் திட்டம் தீட்டினர்!

காசுக் காசைப் பட்டு யூதாசு – ஏசுவைக்
காட்டிக் கொடுத்து பாவம் செய்தான்!
குற்ற மில்லா இறைவனின் தூதனை
கொடிய சிலுவையிலறைந்து கொன்றனர் பாவிகள்!

சிலுவையில் மரித்துப் பின்மூன்றாம் நாளில் – தன்
சீடர்கள் முன்பு உயிர்த்து எழுந்து
காட்சி தந்து பின்னர் மறைந்தார்! – பல
கோடி மக்களின் உள்ளத் துறைந்தார்!!

– ஆ. செந்தில் குமார்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மீட்பர் இயேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.