சரஸ்வதிராசேந்திரன்

 

அருமை மகனே அன்புருவே

ஆசைமகனே கேளாயோ

உடலில் பலமே இருந்தென்ன

உள்ளத்தில் திறமே வேண்டுமடா

நடையில் பணிவுடன் நற்குணமும்

நாவில் நற்சொல் நல்மனமும்

கொண்டால் அல்லவா நீ மனிதன்

உறக்கம் போக்கு வையத்தில்

ஊக்கம் பிறக்க பாடுபடு

தேடும் வாழ்வில் வெற்றிதனை

சேர்க்கும் மணக்கும் நல்லுணர்வே

நல்லோர் ஏற்க நன்மைசெய்

உயர்ச்சிஅடைய வழி சொன்னேன்

உணர்ச்சி சிதைந்தால் வாழ்கையில்லை

சரஸ்வதிராசேந்திரன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.