கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

watercolour -lr
”கீதையாய் ஆச்சுதோ, கோதைத் திருப்பாவை,
ஓத(கடல்) வண்ணனே ஒப்புதல்: -தாதை(என்னப்பர் திருமால்)
கரியாமை போல்வந்து கல்லாய்க்(மந்திர வெற்பு) ,கடைய,
பெரியாழ்வார் பெண்ணாய்ப் பிறப்பு’’….கிரேசி மோகன்….!
“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை(தந்தை)
பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டார்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….!
”வெப்பறியா மார்கழியில் துப்புரவாய் நீராடி
ஒப்பறியா நோன்பிருந்து உத்தமர்க்கு -சொப்பனத்தில்
இல்விதித்து இங்கிழுத்து வில்லிபுதூர் மண்ணிலம்மிக்
கல்மிதித்த காலிரெண்டும் காப்பு….கிரேசி மோகன்….!