மாபெரும் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி ….
வல்லமை மிக்க மரபை உருவாக்கிக் சென்றுள்ள, கோடிக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ள ஒப்பற்ற தலைவர் , ஆகச்சிறந்த தமிழறிஞர், தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்த, தி.மு.கழக தலைவர் கலைஞர் கருணாநிதி தமது 94வது அகவையில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு நம் வல்லமை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் குடும்பத்தினர் மற்றும் கழகத் தொண்டர்களின் மனம் சாந்தி பெறவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் நம் வல்லமை பிரார்த்தனை செய்கிறது.